×

மான் வேட்டையாடி இறைச்சியை விற்றவர் கைது 5 கிலோ இறைச்சி, நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் குடியாத்தம் அருகே

குடியாத்தம், ஆக.25: குடியாத்தம் அருகே மானை வேட்டையாடி வந்து இறைச்சியை விற்பனை செய்த வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கோல்த்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி(36). கூலி வேலை செய்து வருகிறார். இவர் வனப்பகுதியில் வாழும் மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை நாட்டுத்துப்பாக்கி மூலம் வேட்டையாடி கொண்டு வந்து, அவற்றின் இறைச்சியை விற்பனை செய்து வருவதாக குடியாத்தம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று ராஜீவ் காந்தி வீட்டில் வனத்துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது, மானை வேட்டையாடி கொண்டு வந்து இறைச்சியை விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, வனத்துறையினர் அவரிடம் இருந்து 5 கிலோ மான் இறைச்சி மற்றும் வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து ராஜீவ் காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மான் வேட்டையாடி இறைச்சியை விற்றவர் கைது 5 கிலோ இறைச்சி, நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Tags : Gudiatham ,Vellore ,Dinakaran ,
× RELATED குடியாத்தம் அருகே கட்டிட தொழிலாளி...